டீசல் தட்டுப்பாடு-லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை!
நாமக்கல்: அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் லாரிகளுக்கு டீசல் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். மாறாக இதே போன்ற தட்டுப்பாடு நீடித்தால் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய நேரிடும் என்று லாரி உரிமையாளர்கள் சங்கம் தமிழக முதல்வருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அதன் தலைவர் முனிரத்தினம் முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,
தமிழகத்தில் சுமார் இரண்டு லட்சத்து எண்பதாயிரம் லாரிகள் இயங்கி வருகின்றன. சமீப காலமாக கடுமையான டீசல் தட்டுபாடு நிலவி வருவதால் லாரி உரிமையாளர்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.
தமிழகத்தில் மின்வெட்டு அதிகமாக இருப்பதால் தொழிற்சாலை நிறுவனங்கள் மற்றும் சாப்ட்வேர் நிறுவனங்களில் டீசலை அதிகமாக பயன்படுத்துகிறார்கள் என்கின்றனர். பெட்ரோல் பங்குகளில் பேரல்கள் மூலம் டீசலை தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் தான் அதிகமாக டீசல் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.
அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் லாரிகளுக்கு தமிழக அரசு டீசல் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மாறாக இதே நிலை நீடித்தால் விரைவில் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய நேரிடும் என்று கடிதத்தில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications