மாப்பிள்ளை ஓட்டம்-கல்யாணம் நின்றது

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே தாலி கட்டும் நாளில் மணமகன் ஓட்டம் எடுத்தால் கல்யாணம் நின்று போனது.

தூத்துக்குடி மாவட்டம், குளியங்குளத்தை சேர்ந்தவர் அருள்ஜோதி (28). நெடுஞ்சாலைத்துறை ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும் கிழநம்பிபுரத்தை சேர்ந்த முத்துலட்சுமி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இவர்களது திருமணம், கோவில்பட்டி செண்பகவள்ளி அம்மன் கோயிலில் நேற்று (செப்டம்பர் 3 ம் தேதி) நடைபெறுவதாக இருந்தது.

திருணத்தை ஒட்டி பெண் வீட்டார் அதிகாலையிலேயே கோவிலுக்கு வந்து விட்டனர். ஆனால், மணமகன் வீட்டார் யாரும் வரவில்லை. குழப்பமடைந்த பெண் வீட்டார் விசாரித்த போது, இந்த திருமணத்தில் மணமகனுக்கு விருப்பம் இல்லை என தெரியவந்தது.

மேலும் முகூர்த்த நேரத்தில் தன்னை கட்டாய தாலி கட்ட வைத்து விடுவார்கள் என்று கருதி மணமகன் வீட்டை விட்டு ஓடி விட்டாராம்.

தகவல் அறிந்த மணமகள் கதறி கண்ணீர் விட்டு அழுதார். அவரை உறவினர்கள் சமாதானம் செய்தனர். பின்னர் கண்ணீரை துடைத்துக் கொண்டு எட்டையபுரம் காவல் நிலையம் சென்று போலீஸில் புகார் கொடுத்தார் முத்துலட்சுமி.

தன் பேரில் மணமகன் அருள்ஜோதி மற்றும் அவரது பெற்றோர்கள், மற்றும் உறவினர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+