புதுச்சேரி நகர்ப் பகுதிக்கு 'பி 2' அந்தஸ்து!
புதுச்சேரி: புதுச்சேரி நகரப் பகுதிக்கு 'பி 2' அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து புதுவை பாமக எம்.பி. ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரி நகரப் பகுதிக்கு 'பி 2' அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசிடம் பலமுறை வலியுறுத்தி வந்தேன். இரண்டரை லட்சம் பேர் மட்டுமே அங்கு வசிப்பதால் அந்த அந்தஸ்து வழங்க முடியாது என்று மத்திய அரசு கூறிவந்தது.
தொடர் வற்புறுத்தல் காரணமாக, 6வது ஊதியக் கமிஷன் பரிந்துரையின் பேரில் புதுச்சேரி நகரப் பகுதிக்கு 'பி 2' அந்தஸ்து கிடைத்துள்ளது.
இந்த புதிய அந்தஸ்து காரணமாக அரசு ஊழியர்களின் வீட்டுப்படி 7.5 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயரும். இதனால் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பயனடைவார்கள்.
ஜிப்மர் மருத்துவமனையில் ரூ. 170 கோடி செலவில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மையம் கட்டப்பட்டு வருகிறது. இதில் விபத்து சிகிச்சை பிரிவும், புற்றுநோய் சிகிச்சை பிரிவும் இடம் பெறும்.
இதன் திறப்பு விழா செப்டம்பர் 20 -ம் தேதி நடைபெறும் என்று தெரிகிறது. துணை ஜனாதிபதி அப்துல் அன்சாரி இதைத் திறந்து வைக்கிறார்.
கட்-அவுட் கலாச்சாரம் வேண்டாம் என்று புதுவை முதல்வராக பதவி ஏற்க உள்ள வைத்திலிங்கம் கூறியிருப்பது வரவேற்புக்குரியது என்றார் எம்.பி. ராமதாஸ்.












Click it and Unblock the Notifications