அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களின் வேகம் குறைப்பு
நெல்லை: பெட்ரோல்-டீசல் தட்டுபாடு மற்றும் விலை உயர்வை சமாளிக்க அரசு போக்குரவத்து கழகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
டீசலை மிச்சப்படுத்தும் வகையில் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களின் வேகம் 60 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் செல்ல இயலாத வகையில் என்ஜின்களில் ஸ்பீட் லாக் பொறுத்தப்பட்டுள்ளது.
எனவே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் அரசு விரைவு பஸ்களை டிரைவர்களால் இயக்க முடியாது.
முன்பு ஒரு லிட்டர் டீசலுக்கு அரசு விரைவு பஸ்கள் சாரசரியாக 4.45 கிலோ மீட்டர் தூரம் சென்றன. தற்போது இந்த வேகக் கட்டுப்பாட்டால் அது 4.85 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளதாம்.
இதை லிட்டருக்கு 5 கிலோ மீட்டர் தூரம் செல்லும் வகையில் உயர்த்த பஸ்சை குறிப்பிட்ட வேகத்தில் இயக்குமாறு டிரைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நெல்லை முதல் சென்னைக்கு தனியார் ஆம்னி பஸ்களில் பயண நேரம் 12 மணி நேரம்தான். ஆனால் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் அல்ட்ரா டீலக்ஸ் பேரூந்துகளின் பயண நேரமோ தற்போது 16 மணி நேரம் வரை ஆகிறது.
இந்நிலையில் டீசல் சேமிப்பு என்ற பெயரில் மேலும் பேருந்தின் வேகத்தை குறைப்பதால் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் ஏற்கனவே தனியார் பஸ்களிடம் பயணிகளை இழந்து வருவது மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
அதிவிரைவு பேருந்து என்று பஸ்சின் போர்டில் மட்டுமே உள்ளது.












Click it and Unblock the Notifications