நிறுவனத்தில் செக்ஸ் டார்ச்சர்: பெண் தீக்குளிப்பு

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: செக்ஸ் டார்ச்சர் தாங்க முடியாமல் இளம்பெண் தீக்குளித்தார். இது தொடர்பாக சூப்பர்வைசர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் அருகே உள்ள செட்டிபாளையம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் வரதராஜ். இவரது மனைவி ராஜேஸ்வரி (30). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அங்குள்ள ஒரு பனியன் கம்பெனியில் ராஜேஸ்வரி வேலை செய்து வந்தார். கம்பெனியில் பணியாற்றும் சூப்பர்வைசர்கள் விக்னேஷ், ரமேஷ் ஆகியோர் ராஜேஸ்வரிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளனர். இதனால் மனம் உடைந்த ராஜேஸ்வரி, வீட்டில் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக் கொண்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர் அளித்த வாக்குமூலத்தின்படி, செக்ஸ் டார்ச்சர் கொடுத்த சூப்பர்வைசர்கள் விக்னேஷ், ரமேஷ் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜேஸ்வரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+