சுகாதாரமற்ற குடிநீர்-பெண் பலி, 4 பேர் கவலைக்கிடம்
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே சுகாதரமற்ற குடிநீரை பருகியதால் பெண் ஒருவர் பலியானார். 4 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராமநாதபுரம் அருகே உள்ளது ஆயக்குடி. இந்த கிராமத்தினர் அங்குள்ள ஊரணி நீரை பயன்படுத்தி வருகின்றனர். ஊரணி சுகாரதாரமற்று இருக்கிறது. எனினும் இந்த கிராமத்து மக்களுக்கு இந்த ஊரணிதான் குடிநீர் ஆதாரம். இந்நிலையில் ஊரணி நீரை பருகிய பலருக்கும் வாந்தி பேதி ஏற்பட்டுள்ளது.
இதில் ராஜ்குமார் என்பவர் மனைவி மாணிக்க ஜோதிக்கு அதிக வயிற்றுப் போக்கு ஏற்பட்டு பரிதாமாக இறந்தார். மேலும், மூக்கம்மாள், சேது பாண்டி உள்பட 4 பேர் வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications