கரூரில் 4,175 மரக்கன்றுகள் நட்ட போலீஸ்

Subscribe to Oneindia Tamil

SP Office - Karur
கரூர்: தமிழக காவல் துறையின் 150வது ஆண்டு விழாவை முன்னி்ட்டு கரூர் மாவட்டத்தில் 4,175 மரக்கன்றுகள் நடப்பட்டன. எஸ்பி சண்முகவேல் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

தமிழக காவல் துறை 150வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன. எஸ்பி சண்முகவேல், கரூர் மாவட்ட காவல்துறை அலுவலகத்திலும், ஆயுதப்படை மைதானத்திலும் மரக்கன்றுகளை நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து கரூர் நகரம், வெங்கமேடு, பசுபதிபாளைம், வாங்கல், வெள்ளியனை, அரவாக்குறிச்சி, சின்னதாராபுரம், தென்னிலை, வேலாயுதம்பாளையம், குளித்தலை, லாலாபேட்டை, மாயனூர், தோகமலை சிந்தாமணிப்பட்டி, பாலவிடுதி ஆகிய காவல் நிலையங்களில் மரம் நடப்பட்டது.

தவிர, பொது மக்களுக்கு பயன்தரும் வகையில் ஊர்ப் பொது இடங்களில் புங்கை, வாகை, வேம்பு, தென்னை, கொய்யா மா, என மொத்தம் 4,175 மரக்கன்றுகளை காவல்துறையினர் நட்டு வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+