பஸ் மரத்தில் மோதி 3 பேர் பலி-20 பேர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: செங்கல்பட்டு அருகே இன்று காலை சாலையோரம் இருந்த மரத்தில் பஸ் மோதியதில் 3 பேர் பலியாயினர். 20 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்தில் சிக்கிய பேருந்து கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்ததாகும். கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு அந்த பஸ் வந்து கொண்டிருந்தது.

செங்கல்பட்டு அருகே சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் பஸ் வந்தபோது, திடீரென தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இதில் வருமான வரித்துறை ஊழியர் லாவண்யா (25), ஜெயஸ்ரீ (58), பஸ் கண்டக்டர் மனோகரன் ஆகியோர் உயிரிழந்தனர்.

ஐந்து பெண்கள் உள்ளிட்ட 20 பயணிகள் படுகாயமடைந்தனர். அனைவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+