தூத்துக்குடி அருகே சார் பதிவாளர் அலுவலங்களில் ரெய்டு
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் புதுகிராமம், சிதம்பரம் நகர் சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.
தூத்துக்குடி புதுகிராமம் மற்றும் சிதம்பரம் நகர் சார் பதிவாளர் அலுவலங்கள் குறித்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு நிறைய புகார்கள் வந்தன. இதையடுத்து லஞ்ச ஒழிப்புதுறை ஏடிஎஸ்பி பெருமாள்சாமி தலைமையிலான போலீசார் இந்த இரண்டு அலுவலங்களிலும் திடீர் சோதனை நடத்தினர்.
இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
லஞ்சப் பணம் ஏதும் கைப்பற்றப்பட்டதா என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications