Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜயக்குமாருக்கு டிஜிபி பதவி உயர்வு-'டம்மி' பதவிக்கு மாற்றம்!

Subscribe to Oneindia Tamil

Vijaykumar
சென்னை: தமிழக காவல்துறையில் மிகப் பெரிய அளவிலான இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூடுதல் டிஜிபி விஜயக்குமார் உள்ளிட்ட நான்கு மூத்த அதிகாரிகளுக்கு டிஜிபி பதவி உயர்வு அளிக்கப்பட்டது.

முக்கியத்துவம் வாய்ந்த சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்து வந்த விஜயக்குமார், காவலர் பயிற்சிப் பிரிவு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

விஜயக்குமார் தவிர டெல்லியில் உளவுப்பிரிவு கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வரும் கே.வி.எஸ்.கோபாலகிருஷ்ணன், சிறைத்துறை கூடுதல் டிஜிபி ஆர்.நடராஜ் மற்றும் கடலோர பாதுகாப்புப் படை கூடுதல் டிஜிபி ஜெகன் சேஷாத்ரி ஆகியோரும் டிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் விஜயக்குமார் காவலர் பயிற்சிப் பிரிவு டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். ஜெகன் சேஷாத்ரி ஊர்க்காவல் படை கமாண்டண்ட் ஜெனரலாக மாற்றப்பட்டுள்ளார்.

இவர்கள் தவிர 9 ஐஜிக்களும், ஒரு கூடுதல் டிஜிபியும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு காகித ஆலை தலைமை கண்காணிப்பு அதிகாரியாக இருக்கும் ஐஜி சைலேந்திர பாபு, சென்னை சிறப்பு அதிரடிப்படை ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

தலைமையிடத்து ஐஜியாக இருக்கும் ஆர்.சி. குடவாலா, வடக்கு மண்டல ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

அப்பதவியில் தற்போது இருந்து வரும் கே.ராதாகிருஷ்ணன், கூடுதல் டிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். சிவில் சப்ளைஸ் கூடுதல் டிஜிபியாக ராதாகிருஷ்ணன் பொறுப்பு வகிப்பார்.

போலீஸ் பயிற்சிப் பிரிவு ஐஜியாக உள்ள ராஜேந்திரனும் கூடுதல் டிஜிபியாக்கப்பட்டுள்ளார். அவர் இதுவரை விஜயக்குமார் வகித்து வந்த சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சிவில் சப்ளைஸ் சிஐடி கூடுதல் டிஜிபியாக இருந்து வந்த விபாகர் சர்மா, போலீஸ் வீட்டு வசதிக் கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

பொருளாதார குற்றப் பிரிவு ஐஜி ஜே.கே.திரிபாதி தலைமையக ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

ஆயுதப் படை ஐஜி ராஜேந்திரன், பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேற்கு மண்டல ஐஜி சஞ்சய் அரோரா, ஆயுதப்படை ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

திருச்சி போலீஸ் ஆணையராக இருந்த பிரமோத் குமார், கோவை மேற்கு மண்டல ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

அதிரடிப்படை ஐஜி அலெக்சாண்டர் மோகன், திருச்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை சிறப்பு புலனாய்வு ஐஜி ராஜா, தமிழ்நாடு காகித ஆலை தலைமை கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊர்க்காவல் படை துணை கமாண்டண்ட் ராதாகிருஷ்ணன், போலீஸ் பயிற்சி ஐஜியாக சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+