கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம்-வாகனங்களுக்கு தடை
நெல்லை: நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் போராட்டம், தர்ணா ஆகியவை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை சிலர் மீறுவதால் தனியார் வாகனங்கள் வளாகத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நெல்லை கலெக்டர் அலுவலக வாளகத்திற்குள் ஆர்ப்பாட்டங்கள், தர்ணா போராட்டங்கள் ஆகியவை நடத்த அனுமதியில்லை. ஆனால் உத்தரவை மீறி கலெக்டர் அலுவலக வாளகத்திற்குள் வேன்கள், கார்களில் உள்ளே நுழைவதும், கலெக்டர் அலுவலக வாளகத்திற்குள் போராட்டங்கள் நடத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் அரசு அலுவலங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போதுமான அளவுக்கு கிடையாது. மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கும் திங்கள்கிழமை மட்டுமே பாளை போலீசார் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
எனவே கலெக்டர் அலுவலக வாளகத்திற்குள் அந்நிய வானங்கள் நுழைவதை தடுக்கவும், வளாகத்தில் அமைதி ஏற்படுத்தவும் கலெக்டர் பிரகாஷ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் தவிர அந்நியர்களின் வாகனங்கள் கலெக்டர் அலுவலகத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்நிய வாகனங்கள் நுழையாமல் கண்காணிக்க கலெக்டர் அலுவலக வாயிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications