ஹீரா, கபூர், அலி அப்துல்லாவுக்கு காவல் நீட்டிப்பு
நெல்லை: தமிழகத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு கைதான அப்துல் கபூர், அலி அப்துல்லா மற்றும் ஹீராவுக்கு போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த தீவிரவாதிகள் ஷேக் அப்துல் கபூர் மற்றும் ஹீரா ஆகியோர் நெல்லையில் கைது செய்யப்பட்டனர். சிறையில் இருந்தபடி தாக்குதலுக்கு திட்டம் போட்டுத் தந்த அலி அப்துல்லாவும் கைது செய்யப்பட்டார்.
இவர்களிடம் நெல்லை போலீஸார் நடத்திய விசாரணையில் தமிழகத்தில் பல இடங்களில் குண்டு வைக்கும் நாசவேலையில் ஈடுபட இருந்தது தெரிய வந்தது. போலீஸார் இதை முறியடித்தனர்.
அவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்த பின்னர் சேக் அப்துல் கபூர் பாளை சிறையிலும், ஹூரா மதுரை சிறையிலும், அலி அப்துல்லா புழல் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் சேக் அப்துல் கபூர், ஹீரா, அலி அப்துல்லா ஆகியோரை போலீசார் வீடியோ கான்பிரன்சிங் மூலம் நெல்லை 4வது மாஜிஸ்திரேட் செல்வம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். மூன்று பேருக்கும் வரும் 22ம் தேதி வரை காவலை நீட்டிப்பு செய்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications