புலிகளின் உளவுப் பிரிவு தலைமையகம் மீது விமானத் தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: வவுனியா விமானப் படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதல் நடத்தி இந்தியா வழங்கிய ரேடார்களை சேதப்படுத்தியதையடுத்து புலிகளின் உளவுப் பிரிவு தலைமையகத்தின் மீது இலங்கை விமானப் படை விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.

இது குறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிளிநொச்சிக்கு மேற்கே 1 கி.மீ தூரத்தில் உள்ள புலிகளின் உளவுப் பிரிவு தலைமையகம் மீது விமானப் படை விமானங்கள் தாக்குதல் நடத்தின.

அங்கு புலிகளின் முக்கியத் தலைவர்கள் கூடியிருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த இடத்துக்கு புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மன் அடிக்கடி வந்து போவது வழக்கம்.

இத் தாக்குதலால் புலிகளின் தகவல் தொடர்பு கட்டமைப்பில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களது தகவல் பரிமாற்றம் முற்றிலும் நின்றுபோயுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், இதை புலிகள் உறுதிப்படுத்தவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+