ஓணம்: சென்னைக்கு நாளை உள்ளூர் விடுமுறை
சென்னை: ஓணம் பண்டிகையையொட்டி சென்னையில் நாளை உள்ளூர் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாள மக்கள் கொண்டாடும் முக்கியப் பண்டிகை ஓணம். அது நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மலையாளிகள் அதிகம் வசிக்கும் கன்னியாகுமரி, கோவை ஆகிய மாவட்டங்களில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சென்னைக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதேபோல இந்த ஆண்டும் ஓணத்திற்கு சென்னையில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக நாளை மறு நாள் பணி நாளாக இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரியிலும் விடுமுறை...
அதேபோல, ஓணம் பண்டிகையையொட்டி புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாஹே பகுதியில் ஏற்கனவே பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்குப் பதிலாக செப்டம்பர் 27ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications