விமான நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்தவர் கைது
சென்னை: விமான நிலையத்தில், விமான ஊழியர்கள் நுழையும் பகுதிக்குள் தவறுதலாக நுழைந்து விட்ட பிளாஸ்டிக் நிறுவன ஊழியர், அத்துமீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பிளாஸ்டிக் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருபவர் சாய் ராஜ் (51). இவர் விமான ஊழியர்கள் வந்து செல்லும் பகுதியான 9வது நுழைவாயில் வழியாக நேற்று இரவு தனது காருடன் நுழைந்தார்.
இதையடுத்து அவரை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தினர்.
அப்போது அவர்களிடம் பல்லாவரம், செயின்ட் தாமஸ் மவுன்ட் பகுதியில் போக்குவரத்தில் சிக்கிக் கொண்டதால் தாமதமாகி விட்டது. அதனால்தான் இந்த பாதையை உள்ளே செல்லும் வழி என நினைத்து வந்து விட்டேன் என்று கூறியுள்ளார் சாய்ராஜ்.
ஆனால் அவரது கோரிக்கையும், விளக்கத்தையும் ஏற்காத சாய்ராஜ், விமான நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் அவர் மீது புகார் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications