மாநகராட்சி இடைத் தேர்தல்: வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு கோரும் அதிமுக
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மாநகராட்சி இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி அக்கட்சியைச் சேர்ந்த சேகர் பாபு எம்எல்ஏ காவல்துறை ஆணையரிடம் மனு அளித்தார்.
வடசென்னை மாவட்ட அதிமுக செயலாளரும், எம்எல்ஏவுமான சேகர் பாபு, சீனிவாசன் எம்எல்ஏ மற்றும் 18, 44வது வார்டு அதிமுக வேட்பாளர்கள் ஆகியோர் இன்று கமிஷனர் சேகரை சந்தித்து மனு கொடுத்தனர்.
அதில், வரும் 18ம் தேதி இரண்டு வார்டுகளுக்கு இடைத் தேர்தல் நடக்கிறது. தேர்தல் நாளன்று வாக்குச் சாவடிகளில் வெளியாட்களை அனுமதிக்கக் கூடாது. வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். சுவர் விளம்பரங்களை அழிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மனுவை வாங்கிக் கொண்ட கமிஷனர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.












Click it and Unblock the Notifications