பாஜக நிர்வாகிக்கு சாட்டையடி: 2 பேருக்கு வலை
விளாத்திகுளம்: பாஜக நிர்வாகியை சாட்டையால் அடித்து விட்டு தப்பிய 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
விளாத்திகுளம் மீரான்பாளையம் தெருவை சேர்ந்த பெருமாள் மகன் பாலவினாயம். தூத்துக்குடி மாவட்ட பாரதீய ஜனதா கட்சி செயலாளரான இவர் நேற்று மாலை சூரங்குடி அருகே உள்ள சண்முகபுரத்திற்கு சென்று தனது நண்பர் சூரைய்யா என்பவரை அழைத்துக் கொண்டு பைக்கில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.
சூரங்குடி அருகே வரும்போது அந்த வழியாக சாலையில் மாடுகளை ஓட்டிக் கொண்டு 2 பேர் வந்தனர். அப்போது அவர்களிடம் பாலவினாயம் மாடுகளை ஓரமாக ஓட்டிச் செல்லுங்கள் என்று கூறினார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த அவர்கள் தாங்கள் வைத்திருந்த சாட்டையால் பாலவினாயத்தை சராமரியாக அடித்து விட்டு தப்பி விட்டனர்.
இதுகுறித்து பாலவினாயகம் விளாத்திகுளம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரவி விசாரணை நடத்தி பாலவினாயகத்தை தாக்கிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications