பாஜக ஆட்சி அமைத்தால் பொடா கொண்டு வரப்படும்: அத்வானி
பெங்களூர்: பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்தால் பொடா சட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று பாஜக தலைவர் அத்வானி கூறியுள்ளார். மேலும் மோடியின் எச்சரிக்கையை மத்திய அரசு அலட்சியப்படுத்தியதன் விளைவுதான் டெல்லி தாக்குதல் என்றும் மத்திய அரசை அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பெங்களூரில் நடந்த விஜய சங்கல்ப யாத்திரையை தொடங்கி வைத்து அத்வானி பேசுகையில், டெல்லியில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். டெல்லியை தாக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக பிரதமருக்கு குஜராத் முதல்வர் நரேந்திரமோடி தகவல் கொடுத்தும் சதித்திட்டத்தை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது.
குஜராத் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் அம்மாநில போலீசார் நடத்திய விசாரணையின்போது டெல்லியை தாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பது தெரியவந்தது. 10 நாட்களுக்கு முன்பு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தபோது இத் தகவலை தெரிவித்தார்.
ஆனால் உரிய நடவடிக்கை எடுக்க மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தவறிவிட்டதால் இப்போது டெல்லியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளிடம் மத்திய அரசு மென்மையான போக்கை கடைபிடிப்பதாலேயே நாட்டில் பயங்கரவாதம் பெருகி வருகிறது.
அனைத்து துறைகளிலும் மத்திய அரசு தோல்வி அடைந்து வருவதால் ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க பிரதமர் மன்மோகன் சிங் தயாரா? இது பிரதமருக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும் நான் விடுக்கும் சவாலாகும்.
இதுவரை பதவி வகித்த பிரதமர்களில் மன்மோகன் சிங்தான் மிகவும் பலவீனமான பிரதமர். இவருக்கு முன்பு அந்த பதவியில் இருந்தவர்கள் ஏதோ சில சாதனைகளை செய்துள்ளனர். ஆனால் மன்மோகன் சிங்கின் சாதனை என்பது குறித்து சொல்லப்பட எதுவுமே இல்லை.
உள்நாட்டு பாதுகாப்பு, வேளாண் நெருக்கடி, விலைவாசி உயர்வு ஆகியவற்றை திறம்பட கையாள்வதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது. பாதுகாப்பு விஷயத்திலும் மத்திய அரசு தோல்வியை தழுவியுள்ளது என்பதற்கு டெல்லியில் நடந்துள்ள குண்டு வெடிப்பு சம்பவங்களே உதாரணமாக திகழ்கிறது.
மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தீவிரவாதத்துக்கு எதிரான பொடா சட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்றார் அத்வானி.
-
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்?












Click it and Unblock the Notifications