இலங்கைத் தமிழரிடம் பணம் கேட்டு மிரட்டிய போலி போலீஸ்
திருச்சி: க்யூ பிரிவு போலீசார் என்று கூறி இலங்கை தமிழர் ஒருவரிடம் ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டிய ஆசாமிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருச்சி கே.கே.நகர் பகுதியில் வசிப்பவர் செந்தில்நாதன் (26). இவர் இலங்கை யாழ்பாணத்தை சேர்ந்தவர். தற்போது லண்டனில் பணிபுரிந்து வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு உறவினர்களை பார்க்க திருச்சி வந்தார்.
கடந்த 10ம் தேதி செந்தில்நாதன் வீட்டிற்கு வந்த மூன்று பேர், தாங்கள் க்யூ பிரிவு போலீசார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர். செந்தில்நாதனின் ஆவணங்களை சரி பார்த்து, விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது, லண்டனில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக ஏராளமான பணம் கொண்டு வந்துள்ளீர்கள், உங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க எங்களுக்கு ரூ.15 லட்சம் கொடுக்க வேண்டும் என்று செந்தில்நாதனிடம் அவர்கள் கூறியுள்ளனர்.
இவர்களின் நடவடிக்கை மீது சந்தேகம் ஏற்பட்டதால், கே.கே.நகர் போலீஸில் செந்தில்நாதன் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து க்யூ பிரிவு போலீசார் என்று கூறிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் போலீஸாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications