குண்டுவெடிப்பு: பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
மும்பை: டெல்லி தொடர் குண்டுவெடிப்பு, அமெரிக்க நிதி அமைப்பில் ஏற்பட்டுள்ள கடும் வீழ்ச்சி, லெஹ்மன் மற்றும் மெரில் லிஞ்ச் நிதி நிறுவனங்களின் பின்னடைவு போன்றவற்றால் சர்வதேச பங்குச் சந்தையில் நிச்சயமற்ற போக்கு நிலவுகிறது. இதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
இன்று வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களில் சென்செக்ஸ் எனப்படும் மும்பை பங்குச் சந்தையில் 741.99 புள்ளிகளும், நிப்டி எனப்படும் தேசிய பங்குச் சந்தையில் 245.05 புள்ளிகளும் சரிந்துள்ளன.
நடுத்தர மற்றும் சிறிய பங்குகளும் கடும் சரிவைச் சந்தித்துள்ளன.
இப்போதைய நிலவரம் சென்செக்ஸ்- 13,259.20 புள்ளிகள், நிப்டி- 3983.40.
ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் (-8.85), சத்யம் (-8.58), ஸ்டெரிலைட் இன்டஸ்ட்ரீஸின் (8.71) பங்குகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன.












Click it and Unblock the Notifications