தூத்துக்குடி மாணவி சென்னையில் கடத்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்வு எழுதுவதற்காக சென்னை வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவி கடத்தப்பட்டார். அவரை கடத்திய மர்ம கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை மடிப்பாக்கம் முதல் குறுக்கு தெருவைச் வசிப்பவர் எட்வின் ராஜ் (38). தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்தவர். இவரது தங்கை ஏஞ்சல்.

ஒரு தேர்வு எழுதுவதற்காக சென்னையில் உள்ள அண்ணன் எட்விட் ராஜ் வீட்டுக்கு வந்தார்.

தேர்வு முடிந்த பிறகு, வீட்டில் ஏஞ்சல் மட்டும் தனியாக இருந்தார். அப்போது மர்ம ஆசாமி ஒருவர் வீட்டுக்கு வெளியில் இருந்தபடி கூப்பிட்டுள்ளார். விசாரிப்பதற்காக ஏஞ்சல் வெளியில் வந்தபோது, அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று ஏஞ்சலை காரில் கடத்தியதாக கூறப்படுகிறது.

வீட்டிற்கு திரும்பிய எட்வின்ராஜ் ஏஞ்சலை காணாமல் பதறினார். எங்கு தேடியும் ஏஞ்சல் கிடைக்கவில்லை. இதற்கிடையே நண்பர் ஒருவர் மூலம் ஏஞ்சல் கடத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த எட்வின், மடிப்பாக்கம் உதவி போலீஸ் கமிஷனர் சங்கர பாண்டியனிடம் புகார் செய்தார்.

அவரது உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குபதிவு செய்தார். ஏஞ்சலை கடத்தி சென்ற கும்பலை பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+