விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் வன்முறை: குஜராத்தில் ஊரடங்கு

Subscribe to Oneindia Tamil

Gujarat map
வதோதரா: குஜராத்தின் வதோதரா நகரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது ஏற்பட்ட வன்முறையை அடக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார். 20 பேர் படுகாயமடைந்தனர்.

பதேபுரா பகுதியில் நேற்று முன்தினம் விநாயகர் ஊர்வலம் சென்றபோது இரு பிரிவினருக்கு இடையே மோதல் மூண்டது. இரு தரப்பினரும் கல்வீச்சில் இறங்கியதோடு, வன்முறையிலும் ஈடுபட்டனர். இதில் 15 பேர் காயமடைந்தனர்.

இந் நிலையில் நேற்று காலை மீண்டும் அந்தப் பகுதியில் வன்முறை வெடித்தது. இரு தரப்பினரும் மோதிக் கொண்டதையடுத்து கும்பலை அடக்க போலீசார் தடியடி நடத்தினர், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர்.

ஆனால், கலவரம் தொடர்ந்ததையடுத்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் பலியானார். மேலும் 20 பேர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

நிலைமை இப்போது கட்டுக்குள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+