ஏவுகணைத் திட்டமும் போச்சு: பாஜக புகார்
டெல்லி: அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தின் மூலம் அணு ஆயுத சோதனை நடத்த முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ள பிரதமர் மன்மோகன் சிங், அதன் மூலம் இந்தியாவின் ஏவுகணை வளர்ச்சித் திட்டத்தையும் காவு கொடுத்து விட்டார் என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய வெளியுறவு அமைச்சருமான ஜஸ்வந்த் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சமீபத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு எழுதிய கடிதத்தில், இந்தியா மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்தாது என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், ஏவுகணைத் திட்டத்தை முடக்கிப் போடும் ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தையும் இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய வெளிறவு அமைச்சகம் செப்டம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரு கடிதங்கள் மூலம் அமெரிக்காவிடம் உறுதியளித்துள்ளது.
இது மிகப் பெரும் ஆபத்தாகும். பல வருடங்களாக மேற்கொண்டு வரும் ஏவுகணை வளர்ச்சித் திட்டத்தை நாம் கைவிடுவது மிகப் பெரிய தவறான முடிவாகும்.
இதன் மூலம் அணு ஆயுத சோதனையை முடக்கி வைத்தது போல இப்போது ஏவுணைத் திட்டத்தையும் மன்மோகன் சிங் அரசு முடக்கி வைத்து விட்டது. இது நாட்டுக்கு பேராபத்தை ஏற்படுத்தும்.
அமெரிக்காவுக்கு இந்தியா அளித்துள்ள உறுதிமொழியின்படி, ஏவுணை திட்டங்களை நாம் சுதந்திரமாக செயல்படுத்த முடியாது. ராக்கெட் திட்டங்களையும் நாம் முடக்கி வைக்க நேரிடும். நம்மால் 300 கிலோ மீட்டருக்கு மேல் ஏவுகணைகளை ஏவவும் முடியாது என்று கூறியுள்ளார் ஜஸ்வந்த் சிங்.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு












Click it and Unblock the Notifications