For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அம்பை கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

By Staff
Google Oneindia Tamil News

அம்பாசமுத்திரம்: கல்லூரியில் தனியார் நிறுவனம் நடத்தும் கம்ப்யூட்டர் பயிற்சியை முறைபடுத்த வலியுறுத்தி அம்பை கல்லூரி மாணவ மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அம்பாசமுத்திரம் கலைக்கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஒராண்டு கம்யூட்டர் வகுப்புகள் தனியார் நிறுவனத்தினரால் நடத்தப்படுகிறது. இதில் மாணவ, மாணவிகள் கட்டாயமாக சேர வற்புறுத்தப்படுகின்றனர். இதற்காக ரூ.1,250 வசூலிக்கப்பட்டது.

ஆனால் வாரத்தில் ஒருநாள் மட்டுமே கம்யூட்டர் வகுப்பு நடத்தப்படுகிறது. இதை கண்டித்தும் முறையாக கம்ப்யூட்டர் வகுப்பை நடத்த வேண்டும், இல்லை என்றால் பணத்தை திரும்ப தர வேண்டும் என்று கூறி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். ஆனால் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த 200க்கும் மாணவர்கள் அம்பை-முக்கூடல் சாலையில் மறியிலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மாணவ, மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். நடவடிக்கை எடு்ப்பதாக போலீஸார் கூறியதை அடுத்து மாணவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X