For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெல்லை-திருச்செந்தூர் ரயில் 27க்கு மாற்றம்

By Staff
Google Oneindia Tamil News

நெல்லை:நெல்லை-திருச்செந்தூர் இடையிலான அகல ரயில் சேவை வரும் 26ம் தேதி தொடங்கப்படுவதாக இருந்தது. இந்த நிகழ்ச்சி 27ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நெல்லை-திருச்செந்தூர் இடையிலான மீட்டர் கேஜ் ரயில் போக்குவரத்து கடந்த 2006 டிசம்பரில் நிறுத்தப்பட்டது. அடுத்த மாதமே அகல ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. சுமார் ரூ.70 கோடியில் செலவில் 62 கிமீ தூரமுள்ள இந்த பாதையில் புதிதாக 194 பாலங்கள் கட்டப்பட்டன.

புதிய பிளாட்பாரங்கள், ரயில் நிலைய கட்டடங்கள், தண்டவாளம் அமைக்கும் பணிகள் அனைத்தும் சமீபத்தில் முடிக்கப்பட்டன. பணிகளை ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் சிஜேஎஸ் நாயுடு கடந்த ஆகஸ்ட் மாதம் ஆய்வு செய்தார்.

அப்போது திருச்செந்தூரிலிருந்து நெல்லைக்கு 120 கி.மீ. வேகத்தில் வெள்ளோட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்நிலையி்ல் இந்த ரயில் சேவை வரும் 26ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டது.

தற்போது இந்த விழாவை 27ம் தேதிக்கு மாற்றி அறிவித்துள்ளது ரயில்வே நிர்வாகம். 26ம் தேதி மத்திய உள்துறை இணை அமைச்சரும் தொகுதி எம்பியுமான ராதிகா செல்வியின் கணவர் வெங்கடேஷ பண்ணையாரின் நினைவு தினமாகும்.
இதனால் அவரால் விழாவில் பற்கேற்க முடியாது என்று கருதப்பட்டது. இதே போல மற்ற சில விஜபிகளும் தேதியை மாற்ற பரிந்துரை செய்ததால் அனைவருக்கும் வசதியாக தேதி மாற்றப்பட்டுள்ளது.

இதற்கான விழா திருச்செந்தூரில் நடைபெறுகிறது. விழாவில் ரயில்வே இணை அமைச்சர் வேலு கொடியசைத்து ரயில் சேவையை துவக்கி வைக்கிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X