ஓமன் சிறையில் 40 இந்திய பெண்கள்-விபச்சார புகாரில் அடைப்பு!
மஸ்கட்: விபச்சாரம் உள்ளிட்ட புகார்களின் பேரில் கைது செய்யப்பட்ட கேரள நர்சுகள் உள்ளிட்ட 40 இந்தியப் பெண்கள் ஓமன் நாட்டு சிறையில் வாடி வருகின்றனர்.
ஓமன் நாட்டில் ஏராளமான இந்தியர்கள் வசிக்கிறார்கள். இவர்கள் கேரளா உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பெரும்பாலான பெண்கள் நர்ஸ் வேலை பார்ப்பவர்கள்.
இந் நிலையில் மஸ்கட், ருவி உள்பட பல்வேறு நகரங்களில் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அடுக்குமாடி குடியிருப்புகளிலும் சோதனை நடந்தது. அப்போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்து 108 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டுள்ளன. விபசார விடுதிகள் நடத்தி வந்ததாகவும், விசா இல்லாமல் தங்கி இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கைதானவர்களில் 90 பேர் இந்தியர்கள். இவர்களில் 40 பேர் பெண்கள். 50 நாட்களுக்கும் மேலாக இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது விபசார வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த 40 பெண்களில் பெரும்பாலானவர்கள் 20 வயதுக்கு உட்பட்டவர்கள். ஆனால் சட்டப்படி 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் விசா வழங்கப்பட வேண்டும்.
இருப்பினும் போலியான வயதுச் சான்றிதழைக் காட்டி, ஏஜண்டுகளுக்கு அதிக பணம் கொடுத்து இவர்கள் ஓமன் நாட்டுக்கு வந்துள்ளனர். இப்போது கடல் கடந்து வந்து சிறையில் கண்ணீர் வடித்துக் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications