For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாறுமாறாக வந்த லாரி மோதி 9 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

கோவை: ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே குடிசைக்குள் பாய்ந்த லாரி மோதி 2 குழந்தைகள், 3 பெண்கள் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். போலீஸார் அவரைத் தேடி வருகின்றனர்.

நேற்று நள்ளிரவில், ஈரோடு மாவட்டம் காசிபாளையம் அருகே உள்ள கொடுமுடி பகுதியில், ஈரோட்டிலிருந்து கரூருக்கு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டில் இல்ைல. தாறுமாறாக வந்த லாரி சாலையோரம் இருந்த குடிசை வீடுகளுக்குள் பாய்ந்தது.

2 குடிசை வீடுகள், ஒரு ஓட்டு வீட்டை இடித்துக் கொண்டு லாரி நின்றது. இந்த கோர சம்பவத்தில், வீடுகளுக்குள் தூங்கிக் கொண்டிருந்த 2 குழந்தைள், 3 பெண்கள் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்ைதத் தொடர்ந்து சுதாரித்துக் கொண்ட லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாகி விட்ட டிரைவரைத் தேடி வருகின்றனர்.


 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X