ரிலையன்ஸ் கச்சா எண்ணெய்-எரிவாயு தயார்!
கோதாவரி: ரிலையன்ஸ் நிறுவனம் தனது கோதாவரி கடல் சுரங்கத்திலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை எடுத்து வினியோகிக்க ஆரம்பித்துள்ளது.
அடுத்த 18 மாதங்களுக்குள் பேரல் ஒன்றுக்கு 100 டாலர் விலை என்று வைத்துக் கொண்டாலும் ரிலையன்ஸ் உற்பத்தி செய்யவிருக்கும் மொத்த கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு மூலம் இந்தியாவின் இறக்குமதிச் சுமை ரூ.90,000 கோடி (20 பில்லியன் டாலர்) வரை குறையும் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் கோதாவரி-கிருஷ்ணா படுகையிலிருந்து எடுக்கப்பட்ட கச்சா எண்ணெயை வணிக ரீதியாக விற்பனைக்கு வெளியிட்ட முகேஷ் அம்பானி, இது ரிலையன்ஸின் ஒரு எண்ணெய் உற்பத்தி மையத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் மட்டும்தான்.
ஆனால் இன்னும் இதுபோன்ற ரிலையன்ஸின் எண்ணெய் உற்பத்தி மையங்கள் பல முழு வீச்சில் இயங்கத் தொடங்கும்போது உள்நாட்டுத் தேவைக்கான பெரும்பகுதியை ரிலையன்ஸே சப்ளை செய்துவிடும். நாட்டின் மொத்த எண்ணெய் இறக்குமதிச் செலவில் ரூ.90,000 கோடிவரை இதன்மூலம் மிச்சப்படுத்த முடியும்.
இதன் மூலம் எண்ணெய் மற்றும் எரிவாயுக்காக அரசு அளித்து வந்த மானியம் முழுமையாக குறைய வாய்ப்பு உள்ளது. இந்தத் தொகையை அரசு வேறு நல்ல திட்டங்களுக்காகச் செலவழிக்க முடியும் என்றார் அம்பானி.
இப்போதைக்கு கிருஷ்ணா- கோதாவரிப் படுகையிலிருந்து தினசரி 5000 பேரல் உற்பத்தி செய்யப்படும் என்றும், அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் இதன் அளவு 5.5 லட்சம் பேரல்களாக உயர்ந்துவிடும் என்றும் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications