தொட்டிலில் விளையாடிய சிறுவன் கயிறு இறுக்கி பலி!
திருவனந்தபுரம்: குழந்தையைப் போடும் தொட்டிலில் விளையாடிய 12 வயது சிறுவன், கயிறு கழுத்தை இறுக்கியதால், பரிதாபமாக உயிரிழந்தான்.
கேரள மாநிலம் வெஞ்சரமூடு நகருக்கு அருகே உள்ள மங்கியமங்களம் என்ற பகுதியைச் சேர்ந்தவன் விஷால். 12 வயது சிறுவனான இவன் தனது வீட்டில் உள்ள தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது திடீரென தொட்டில் கயிறு கழுத்தை இறுக்கியது. இதனால் மூச்சுத் திணறிய சிறுவன் சில விநாடிகளில் பரிதாபமாக உயிரிழந்தான்.
சம்பவம் நடந்தபோது வீட்டு அறைக்குள் கதவைப் பூட்டிக் கொண்டு சிறுவன் விளையாடியுள்ளான். இதனால் யாராலும் அவனைக் காப்பாற்ற முடியாமல் போனது.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பையனைக் காணாமல் குழம்பிய அவனது தாயார் அறைக்குள் எட்டிப் பார்த்த போதுதான் விபரீதம் தெரிய வந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு சிறுவனை கொண்டு சென்றனர். ஆனால் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications