கேரளாவுக்கு படு ஜோராக நடக்கும் அரிசி கடத்தல்
செங்கோட்டை: நெல்லை மாவட்டம் புளியரை செக்போஸ்டில் போதுமான கண்காணிப்பு இல்லாததால் அரிசி, எரி சாராயம் போன்றவை கேரளாவுக்கு தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றன.
நெல்லை மாவட்டம் புளியரையை அடுத்துள்ள செக்போஸ்டில் தீவிர கண்காணிப்பு இல்லாததால் இந்த வழியாக எரிசாராயம், மணல், அரிசி, கோதுமை போன்ற ரேஷன் பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் கேரளாவுக்கு சர்வ சாதாரணமாக கடத்தப்படுகின்றன. ஹவாலா வர்த்தகமும் படுஜோராக நடந்து வருகிறது.
ரேஷன் அரிசி கடத்தல் தொடர்வதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் முதல்வர் கருணாநிதி.
கலெக்டர்கள் மற்றும் வருவாய் துறையினர், உணவு வழங்கல் துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுக்களை அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படும்.
அரிசி கடத்தலை முழுமையாக தடுக்க மாநில எல்லையில் சோதனை சாவடிகளில் சிறப்பு அலுவலர்கள் அமர்த்தப்படுவார்கள். உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரயில்வே போலீஸாருடன் இணைந்து அடிக்கடி சோதனை நடத்தி ரயில் மூலம் கடத்தல் நடைபெறுவதை முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கடந்த பிப்ரவரி மாதம் கூறியிருந்தார்.
ஆனால் சிறப்பு குழுக்கள் எதுவும் இதுவரை அமைக்கப்படவில்லை. இதனால் செங்கோட்டை வழியாக பஸ்கள் மற்றும் லாரிகள் மூலம் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தல் ஜோராக நடந்து வருகிறது.
தற்போது அண்ணா பிறந்த நாள் நூற்றாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு ரூபாய் அரிசியும் படு ஜோராக கடத்தப்படுவதாக கூறப்படுகிறது












Click it and Unblock the Notifications