விஜயகாந்த் ஆதரவாளர்கள் மீதான வழக்கு: கோர்ட்டில் வடிவேலு சாட்சியம்
கடந்த ஆண்டு வடிவேலு அலுவலகம் முன்பு விஜயகாந்த் கட்சியைச் சேர்ந்தவர்களின் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இவற்றை எடுக்குமாறு வடிவேலு கூறவே அவருக்கும், விஜயகாந்த் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் மூண்டது.
அப்போது வடிவேலு தாக்கப்பட்டார். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீஸில் வடிவேலு கொடுத்த புகாரின் பேரில் விஜயகாந்த்தின் மேலாளர் சதீஷ் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு சைதாப்பேட்டை கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்தப் பின்னணியில்தான் நேற்று வடிவேலுவின் வீடு தாக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று நீதிபதி பெஞ்சமின் முன்னிைலயில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வடிவேலு போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
விஜயகாந்த் ஆதரவாளர்களுக்கு பிடிவாரண்ட்
அப்போது சதீஷ் உள்ளிட்ட 13 பேரும் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து அவர்களை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கூறி போலீஸாருக்கு நீதிபதி பெஞ்சமின் பிடிவாரண்ட் பிறப்பித்தார். பின்னர் வழக்கு 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.













Click it and Unblock the Notifications