சீனாவில் 2 நிலக்கரி சுரங்க விபத்துக்களில் 56 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பெய்ஜிங்: சீனாவில் இரண்டு நிலக்கரி சுரங்கங்களில் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 56 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்.
மத்திய சீனாவில் உள்ள ஹினான் மாகாணத்தில் டெங்பெங் என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கம் ஒன்று உள்ளது. இதில் நேற்று அதிகாலை 108 தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 37 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர். வாயுக்கசிவினால் இந்த வெடிவிபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்தில் 64 பேர் காயமின்றி தப்பினர்.
வடகிழக்கு சீனாவில் உள்ள ஹெய்லாங் ஜிலாங் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். 12 பேர் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications