நானோ தொழிற்சாலை பாதுகாவலர்கள் மீது தாக்குதல்
சிங்கூர்: மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் உள்ள டாடா மோட்டார்ஸின் நானோ தொழிற்சாலை பாதுகாவலர்கள் இருவரை அடையாளம் தெரியாத
விஷமிகள் தாக்கி காயப்படுத்தினர். இதில் இருவரும் படுகாயமடைந்தனர்.
தாக்குதலுக்குள்ளான பாதுகாவலர்களில் அஜீத்குமார் என்பவர் பீகாரைச் சேர்ந்தவர். சர்க்கார் என்பவர் முர்ஷிதாபாத்தைச் ேசர்ந்தவர். நேற்று இரவு இருவரும் பணியில் இருந்தபோது அங்கு வந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று இரும்புத் தடிகள், கூர்மையான ஆயுதங்களால் இருவரையும் பயங்கரமாக தாக்கியுள்ளது.
இதில் இருவரும் படுகாயமடைந்தனர். உடனடியாக இருவரும் ஸ்ரீராரம்பூர் வால்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக ெதரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து சிங்கூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் திருடர்களாக இருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதுவரை இந்தத் தாக்குதல் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.