வடக்கில் நிலைகுலையும் விடுதலைப் புலிகள்-கருணா

போலி விசா மூலம் லண்டனுக்குச் சென்று கைதாகி சிறைவாசம் அனுபவித்து பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார் கருணா. கடந்த 2004ம் ஆண்டு இவர் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்றார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பையும் உருவாக்கினார். பின்னர் இது அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது.
கிழக்கில் நடந்த தேர்தலில் இந்தக் கட்சி, ஆளுங்கட்சியோடு கூட்டணி வைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றது. இக்கட்சியின் பிள்ளையன் தற்போது கிழக்கு மாகாண முதல்வராக உள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிைலயில் கருணா அளித்துள்ள ஒரு பேட்டியில், வடக்கில் விடுதலைப் புலிகள் பலமிழந்து வருவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இலங்கை படைகள் முன்பை விட வலுவாக மாறியுள்ளன. அவர்களின் தாக்குதலை விடுதலைப் புலிகளால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
முன்பு போல எதிர்த்து நின்று தாக்குதல் நடத்த பிரபாகரனுக்கு வாய்ப்புகள் இல்லை. திடீர் தாக்குதல்களில் மட்டுமே அவர்களால் இனி ஈடுபட முடியும்.
அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே முன்பை விட தற்போது நல்ல ஒத்துழைப்பு உள்ளது. இதனால்தான் விடுதலைப் புலிகள் வலுவிழந்துள்ளனர்.
விடுதலைப் புலிகள் வசம் உள்ள அனைத்துப் பகுதிகளையும் விரைவில் ராணுவம் விடுவிக்கும்.
விடுதலைப் புலிகள் வசம் உள்ள பகுதிகளுக்குள் முன்பை விட அதி வேகமாக தற்போது ராணுவம் ஊடுறுவி வருகிறது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அதிபர் ராஜபக்சே சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மிக உறுதியான முடிவுகளை எடுக்கிறார். இது மிகவும் பாராட்டத்தக்கது என்று கூறியுள்ளார் கருணா.
இந்த நிலையில், சமீபத்தில் பாதுகாப்புத்துறை செயலாளரும், அதிபர் ராஜபக்சேவின் தம்பியுமான கோதபயா ராஜபக்சேவை கருணா சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேச்சு நடத்தினார். அப்போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல் குறித்து அவர் கோதபயாவுக்கு பல யோசனைகளைத் ெதரிவித்ததாக தெரிகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications