வடக்கில் நிலைகுலையும் விடுதலைப் புலிகள்-கருணா
போலி விசா மூலம் லண்டனுக்குச் சென்று கைதாகி சிறைவாசம் அனுபவித்து பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார் கருணா. கடந்த 2004ம் ஆண்டு இவர் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்றார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பையும் உருவாக்கினார். பின்னர் இது அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது.
கிழக்கில் நடந்த தேர்தலில் இந்தக் கட்சி, ஆளுங்கட்சியோடு கூட்டணி வைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றது. இக்கட்சியின் பிள்ளையன் தற்போது கிழக்கு மாகாண முதல்வராக உள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிைலயில் கருணா அளித்துள்ள ஒரு பேட்டியில், வடக்கில் விடுதலைப் புலிகள் பலமிழந்து வருவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இலங்கை படைகள் முன்பை விட வலுவாக மாறியுள்ளன. அவர்களின் தாக்குதலை விடுதலைப் புலிகளால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
முன்பு போல எதிர்த்து நின்று தாக்குதல் நடத்த பிரபாகரனுக்கு வாய்ப்புகள் இல்லை. திடீர் தாக்குதல்களில் மட்டுமே அவர்களால் இனி ஈடுபட முடியும்.
அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே முன்பை விட தற்போது நல்ல ஒத்துழைப்பு உள்ளது. இதனால்தான் விடுதலைப் புலிகள் வலுவிழந்துள்ளனர்.
விடுதலைப் புலிகள் வசம் உள்ள அனைத்துப் பகுதிகளையும் விரைவில் ராணுவம் விடுவிக்கும்.
விடுதலைப் புலிகள் வசம் உள்ள பகுதிகளுக்குள் முன்பை விட அதி வேகமாக தற்போது ராணுவம் ஊடுறுவி வருகிறது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அதிபர் ராஜபக்சே சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மிக உறுதியான முடிவுகளை எடுக்கிறார். இது மிகவும் பாராட்டத்தக்கது என்று கூறியுள்ளார் கருணா.
இந்த நிலையில், சமீபத்தில் பாதுகாப்புத்துறை செயலாளரும், அதிபர் ராஜபக்சேவின் தம்பியுமான கோதபயா ராஜபக்சேவை கருணா சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேச்சு நடத்தினார். அப்போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல் குறித்து அவர் கோதபயாவுக்கு பல யோசனைகளைத் ெதரிவித்ததாக தெரிகிறது.