ரேஷன் கடை ஊழியர் சஸ்பெண்ட்: அமைச்சர் வேலு அதிரடி
Subscribe to Oneindia Tamil
ஊட்டி: ஊட்டியில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் தில்லு முல்லு செய்த ஊழியரை உடனே சஸ்பெண்ட் செய்து தமிழக உணவுத்துறை அமைச்சர் எ.வ. வேலு உத்தரவிட்டார்.
அமைச்சர் எ.வ. வேலு கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்ட அதிகாரிகளின் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள கோவை வந்தார். கூட்டத்துக்கு பிறகு ஊட்டிக்கு வந்தார். அங்கு கூடலூர் சாலையில் உள்ள ரேஷன் கடையில் திடீர் ஆய்வு நடத்தினார்.
அப்போது அந்த கடையில் 300 லிட்டர் மண்ணெண்ணை குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த ஊழியரை உடனே செஸ்பெண்ட் செய்யும்படி துறை அதிகாரிக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அந்த ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications