For Daily Alerts
Just In
புஷ் பதவிக் காலத்தில் இதுவே எனது கடைசி பயணம்: மன்மோகன் சிங்
வாஷிங்டன்: அதிபர் புஷ் பதவிக் காலத்தில் தான் அமெரிக்கா வருவது இதுவே கடைசி முறை என்று பிரதமர் மன்மோகன் சிங் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இன்று காலை ஜார்ஜ் புஷ்ஷை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசினார். சந்திப்புக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இவ்வாறு தெரிவித்தார்.
மன்மோகன் சிங் கூறுகையில், அதிபர் புஷ் பதவிக்காலத்தில் இதுவே எனது கடைசி பயணமாக இருக்கும். இந்திய மக்கள் புஷ்ஷை மிகவும் ஆழமாக நேசிக்கிறார்கள். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தியதை வரலாறு நினைவு கூர்ந்து நன்றி கூறும்.
இத்தகையை நிலையை ஏற்படுத்தியதற்காக உங்களுக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன் என்றார் சிங்.
நவம்பர் மாதம் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. அதன் பின்னர் புஷ் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Friday, September 26, 2008, 9:19 [IST]