கூட்டணி: விஜயகாந்த்தை சந்திப்பேன்-தா.பாண்டியன்
தஞ்சாவூர்: தேமுதிகவுடன் தேர்தல் கூட்டணி வைப்பது குறித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்துடன் பேசிய பின்பு முடிவு செய்யப்படும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்தார்.
தஞ்சை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அக்டோபர் 2ம் தேதி சென்னையிலும், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இலங்கை தமிழரின் உயிர் பாதுகாப்பு, உரிமைப் பாதுகாப்பு கோரிக்கையை முன்வைத்து கம்யூனிஸ்டு கட்சி சார்பில் உண்ணாவிரதம் நடைபெற உள்ளது.
இலங்கை அரசு, வன்முறையில் ஈடுபட்டு தமிழ் இன மக்களை கொன்று தீர்க்க முயற்சி செய்கிறது. இலங்கை அரசு தமிழ் இனத்தையே அழிக்கும் செயலில் இறங்கி உள்ளது. எனவே, உடனே போரை நிறுத்தி, அரசியல் தீர்வு காண வேண்டும். இந்த கோரிக்கையை இந்திய அரசு இலங்கை அரசிடம் வலியுறுத்த வேண்டும். இலங்கை அரசுக்கு இந்தியா ராணுவ உதவி, பொருளுதவி செய்யக் கூடாது.
இலங்கையில் அகதிகளாக உள்ள 3 லட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்களுக்கு இந்திய அரசு நேரடியாகவோ, செஞ்சிலுவை மூலமாகவோ உணவு, உடை, மருந்து ஆகியவற்றை உடனே அனுப்ப வேண்டும்.
மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள், விஜயகாந்த்தை சந்தித்துள்ளனர். நாங்களும் விஜயகாந்துடன் சந்தித்து பேசிய பின்பு இறுதி முடிவை இரு கட்சிகளும் இணைந்து எடுப்போம் என்றார்.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications