கைவிட்ட காதலன்- காதலி வளைகாப்பு போராட்டம்!

Subscribe to Oneindia Tamil

திருவிடைமருதூர்: கைவிடப்பட்ட காதலிக்கு காதலன் வீட்டு முன் வளைகாப்பு நடத்தப்பட்டது.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ளது மாங்குடி. இந்த ஊரைச் சேர்ந்த விவசாயி கலியமூர்த்தியின் மகள் மனோரஞ்சிதம்.

தெற்கு மூலங்குடியை சேர்ந்த ராணுவ வீரர் ஜோசப்பின் மகன் பாபு.

பாபு மாங்குடியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.

அப்போது, மனோரஞ்சிதத்திற்கும் , பாபுவிற்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இருவரும் எல்லை மீறியதால்

மனோரஞ்சிதம் கர்ப்பிணியானார்.

வீட்டிற்கு விஷயம் தெரிய வந்தவுடன் பதறிய பெற்றோர் மகளுக்கு பாபுவை திருமணம் செய்து வைக்க முன் வந்தனர்.

ஆனால் பாபுவின் பெற்றோர் திருமணம் செய்து வைக்க மறுத்துவிட்டனர்.

இந் நிலையில் 7 மாத கர்ப்பிணியாகிவிட்ட மனோரஞ்சித்தை காதலன் பாபு வீட்டு முன்பு அமர்த்தி அவருக்கு வளைகாப்பு நடத்தி தங்களது எதிர்ப்பை கிராம மக்கள் வெளிப்படுத்தினர்.

இந்த போராட்ட வளைகாப்பு நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

மனோரஞ்சிதம் மற்றும் மக்களின் அதிரடி நடவடிக்கையால் ஆடிப்போன காதலன் பாபு மற்றும் அவரது பெற்றோர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றுவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+