திருப்பூரில் ஸ்தம்பித்த பனியன் உற்பத்தி!
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூரில் பனியன் உற்பத்தி செய்யும் நிட்டிங் நிறுவனங்கள் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக சுமார் ரூ. 60 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூரில் பனியன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள 500க்கும் மேற்பட்ட நிட்டிங் நிறுவனங்கள் கட்டண உயர்வு கோரி கடந்த 24ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பனியன் துணி உற்பத்திக்கு கிலோ ஒன்றுக்கு ரூ. 2 உயர்த்தி தர வேண்டும் என அவர்கள் கோரி வருகின்றனர்.
பனியன் தயாரிப்புக்கு பயன்படும் ஒசைரி நூல்கள் தேக்கமடைந்ததால் ஒசைரி நூல் தயாரிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த பிரச்சனைகளால் இதுவரை சுமார் ரூ. 60 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
கடந்த 6 நாட்களாக நடந்த இந்த வேலை நிறுத்தம் நேற்று வாபஸ் பெறப்பட்டது.












Click it and Unblock the Notifications