For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடகா: லாரி ஸ்டிரைக் வாபஸ்-தமிழக லாரிகள் இயங்கின

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடகா லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் ஆனதால் தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கமும், வியாபாரிகளும் மக்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.

கர்நாடகா லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வேக கட்டுப்பாடு கருவி பொருத்தும் உத்தரவுக்கு தடை கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

நீதிபதி தனது உத்தரவில் வேக கட்டுப்பாடு கருவி அக்டோபர் 1ம் தேதி முதல் பொருத்த வேண்டும் என்ற உத்தரவை டிசம்பர் மாதம் வரை ஒத்தி வைப்பது உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு கர்நாடகா லாரி உரிமையாளர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவை தொடர்ந்து கர்நாடகா லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுக் கொண்டது.

இதையடுத்து கர்நாடகத்துக்கும், கர்நாடகம் வழியாகவும் இயக்கப்படவிருந்து நிறுத்தப்பட்ட தமிழக லாரிகள் இயங்க ஆரம்பி்த்தன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X