மாணவியுடன் மாயமான பாதிரியார்-விசாரணை
திருத்துறைப்பூண்டி: மாணவியுடன் மாயமான பாதிரியாரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர் பிரான்சிஸ். டிவி மெக்கானிக். இவரது மகள் ஜெனிபர் (20). ஜெனிபரை ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படிக்க வைக்க கோரி அங்குள்ள சர்ச் பாதிரியார் விக்டரிடம் பிரான்சிஸ் உதவி கோரினார். விக்டரும் உதவுவதாக உறுதியளித்தார்.
இந் நிலையில் விக்டரை பார்க்க ஜெனிபர் சர்ச்சுக்கு சென்றார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த பிரான்ஸ் மகளை தேடினார். பாதரியார் விக்டர், ஜெபனிரை அழைத்துக் கொண்டு வெளியே சென்றதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து பாதிரியாரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பிரான்சிஸ் விசாரித்தார். அப்போது இருவரும் மறுநாள் திரும்பி விடுவோம் என விக்டர் கூறினார். ஆனால் இருவரும் திரும்பி வரவிலல்லை. இதையடுத்து திருத்துறைப்பூண்டி போலீஸில் பிரான்சிஸ் புகார் செய்தார்.
போலீஸார் வழக்கு பதிவு செய்து மாணவியுடன் காணாமல்போன பாதிரியாரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications