'ஆஃப் சீசன்' - மீண்டும் களை கட்டும் குளு குளு கொடைக்கானல்
கொடைக்கானல்: மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஆஃப் சீசன் தொடங்கியுள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால் கொடைக்கானல் மீண்டும் களை கட்டத் தொடங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்னும் கோடை காலம் முழுமையாக போகவில்லை. தொடர்ந்து மாநிலத்தின் பல பகுதிகளில் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. கூடவே மின் வெட்டும் சேர்ந்து மக்களை மண்டை காய வைத்துக் கொண்டிருக்கிறது.
இந்தத் தொல்லையிலிருந்து தப்பிக்க தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா தலங்களுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். கோடை காலத்தில் ஊட்டியும், கொடைக்கானலும் கலகலப்பாக இருக்கும். அதேபோல, ஆஃப் சீசன் அல்லது இரண்டாவது சீசனில் கொடைக்கானல் களை கட்டுவது வழக்கம்.
தற்போது கொடைக்கானலில் ஆஃப் சீசன் தொடங்கியுள்ளது. அழகிய இயற்கை காட்சிகள், மிதமான தட்பவெட்பம் என்று சுற்றுலா பயணிகள் மனம் விரும்பி மகிழும் வகையில் கிளைமேட் நிலவுகிறது. இதனால் அங்கு கூட்டம் கூடத் தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications