அமைச்சரை கண்டித்து பாஜக தட்டிபோர்டு - அகற்றியது போலீஸ்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: மதக் கலவரத்தை தூண்டும் வகையில் தி.க.வினர் நடத்தும் நிகழ்ச்சியை அமைச்சர் தொடங்கி வைக்கக் கூடாது என்று பாஜக வைத்த பேனர் அகற்றப்பட்டது. இதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
பாளை வஉசி மைதானத்தில் வரும் 4ம் தேதி திராவிடர் கழக மாணவரணி சார்பில் மூடநம்பிக்கை எதிர்ப்பு மாநாடு மற்றும் பேரணி நடக்கிறது. பேரணியை அமைச்சர் டிபிஎம் மைதீன்கான் தொடங்கி வைக்கிறார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் மாநகர் முழுவதும் தட்டி போர்டு வைக்கப்பட்டுள்ளது. அதில் தசரா நேரத்தில் மதகலவரத்தை ஏற்படுத்தும் வகையில் தி.க.வினர் நடத்தும் பேரணியை அமைச்சர் தொடங்கி வைக்க கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று இரவோடு இரவாக இந்த பேனர்கள் அனைத்தையும் போலீசார் அகற்றி விட்டனர். இதற்கு பாஜவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications