விஜயகாந்த் வழங்கிய சாலை தடுப்பு கம்பிகளுக்கு திடீர் தடை

Subscribe to Oneindia Tamil

Vijaykanth
விருத்தாசலம்: தனது தொகுதியான விருத்தாசலம் நகருக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழங்கிய சாலை தடுப்பு கம்பிகளுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவற்றை சென்னைக்கு கட்சி நிர்வாகிகள் அனுப்பி வைத்தனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகரில் அதிக போக்குவரத்து காரணமாக கடும் நெரிசல் ஏற்படுகிறது.

இதனால் நகரில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் விதமாக போக்குவரத்து போலீசாருக்கு தேவைப்பட்ட இரும்பு தடுப்புகளை தேமுதிக தலைவரும், விருத்தாசலம் தொகுதி எம்எல்ஏவுமான விஜயகாந்த் தனது சொந்த செலவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழங்கினார்.

அந்த இரும்பு தடுப்புகளை போக்குவரத்து போலீசார் நெரிசல் மிகுந்த பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வந்தனர்.

இந்த நிலையில் அவற்றை முழுமையாகப் பயன்படுத்தாமல் கடந்த சில மாதங்களாக ஒரு கோவில் அருகில் அடுக்கி வைத்துள்ளனர்.

இதனை அறிந்த விஜயகாந்த் அவற்றை சென்னைக்கு அனுப்பி வைக்குமாறு தனது கட்சி நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டார்

அதன்படி அந்த தடுப்புகள் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இதுகுறித்து விரைவில் பத்திரிகையாளர் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்துள்ளாராம் விஜய்காந்த்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+