டெல்லியில் கான்டலீசா ரைஸ் - ஒப்பந்தம் கையெழுத்தாகாது?

இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்து விட்டது. இருப்பினும் இந்த ஒப்பந்தத்தில், தடையற்ற எரிபொருள் சப்ளை குறித்து அமெரிக்க தரப்பில் உத்தரவாதம் எதுவும் இடம் பெறாதது இந்தியாவை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவிடம் பேசி தெளிவுபடுத்திய பின்னர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பு நிர்வாக ரீதியிலான பல விஷயங்கள் பேசி தீர்க்கப்பட வேண்டியுள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கான்டலீசா ரைஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா கிளம்புவதற்கு முன்பு வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அணு ஆயுத சோதனை தொடர்பாக ஹைட் சட்டத்தில் உள்ள அம்சங்களை அமெரிக்கா பின்பற்றும். அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக பல நிர்வாக ரீதியிலான விஷயங்கள் பேசப்பட வேண்டியுள்ளது.
2 நாட்களுக்கு முன்புதான் ஒப்பந்தம் தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் கையெழுத்திட அதிபர் புஷ் ஆர்வத்துடன் உள்ளார். விரைவில் அது நடைபெறும்.
இந்த ஒப்பந்தம் நனவாக பாடுபட்ட இந்திய - அமெரிக்க சமூகத்தினர், அமெரிக்க - இந்திய வர்த்தக சமூகத்தினர், தூதர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரையும் புஷ் நிர்வாகம் பாராட்டுகிறது.
இரு தரப்பு உறவுகளையும் மேலும் வலுப்படுத்திக் கொள்ள இந்த ஒப்பந்தம் மூலம் என்னென்ன செய்ய முடியும் என்பது குறித்து புஷ் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.
இந்தியாவுடன் மிகப் பெரிய உறவு அமெரிக்காவுக்கு கிடைத்துள்ளது. எனவே இந்த உறவின் மூலம், இந்த ஒப்பந்தத்தின் மூலம் அதை விரிவுபடுத்திக் கொள்ள தேவைப்படும் நடவடிக்கைகளை நாங்கள் விரிவாக ஆலோசித்து வருகிறோம். நிர்வாக ரீதியிலான பல முக்கிய அம்சங்கள் இன்னும் விரிவாக விவாதிக்கப்பட வேண்டியுள்ளது என்றார்.
ஆனால் தடையற்ற எரிபொருள் சப்ளை குறித்து ரைஸ் எதுவும் குறிப்பிடவில்லை. அதிகாரப்பூர்வமான உத்தரவாதத்தை அமெரிக்கா தராததால், ஒப்பந்தத்தில் கையெழுத்திட அவசரம் காட்ட வேண்டாம் என இந்தியா முடிவு செய்துள்ளது.
இந்தப் பின்னணியில் இன்று ரைஸ் டெல்லி வந்து சேர்ந்தார். 2 நாள் பயணமாக அவர் டெல்லி வந்துள்ளார். சிறப்பு விமானம் மூலம் காலையில் டெல்லி வந்து சேர்ந்த ரைஸுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ரைஸ் டெல்லி வந்துள்ளபோதிலும், அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகும் வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி உள்ளிட்டோரை ரைஸ் சந்திக்கவுள்ளார்.
பிரதமருடனான ரைஸ் சந்திப்பின்போது தடையற்ற எரிபொருள் சப்ளை குறித்து பிரதமர் விவாதிப்பார் எனத் தெரிகிறது.
-
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ! -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
"இந்தியர்களே வெளியேறுங்கள்!" இலவச விமான டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்! டிரம்ப்பின் சர்ச்சை திட்டம் -
கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? திடீரென பறந்த லெட்டர்.. மத்திய அரசு முக்கிய பாயிண்டு -
"நாங்க ஷாக் ஆயிட்டோம்!".. உதவி கேட்டு கதறும் டிரம்ப்.. ஈரானிடம் மண்டியிடுகிறதா அமெரிக்கா? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
ஈரான் பக்கம், ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 3,00000 டன் இந்திய எல்பிஜி! பரபரக்கும் மத்திய அரசு -
மனசாட்சி இடம் கொடுக்கல.. ஈரான் போரால் டிரம்புக்கு எகிறும் பிரஷர்.. அமெரிக்க டாப் அதிகாரி ரஜினாமா -
"இனி அமெரிக்காவுக்கு நேட்டோ தேவையில்லை.." கண்கள் சிவந்த டிரம்ப்.. திடீரென ஆவேசமாக பாய்ந்தார் -
எப்படி என் ராஜதந்திரம்.. ஈரான் அதிபருக்கு போனைப் போட்ட மோடி! களத்தில் இறங்கிய இந்திய கடற்படை! சுபம்! -
ஒழுங்கா கப்பலை அனுப்புங்க.. இல்லனா மாட்டிப்போம்! - நேட்டோ நாடுகளிடம் கெஞ்சிய ட்ரம்ப்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications