அஸ்ஸாமில் கலவரம் பரவுகிறது - 33 பேர் பலி - ராணுவம் வரவழைப்பு
உதால்குரி: அஸ்ஸாம் மிநிலம் உதால்குரி மாவட்டத்தில் போடோக்களுக்கும் சட்ட விரோதமாக பங்களாதேஷிலிருந்து குடிவந்தவர்களுக்கும் ஏற்பட்ட மோதலைத் தடுக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33ஆக உயர்ந்துள்ளது.
அஸ்ஸாமில் வசிக்கும் போடோ இனத்தவருக்கும், வங்கதேசத்திலிருந்து ஊடுறுவி அஸ்ஸாமில் வசித்து வரும் அம்மாநிலத்தவர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
தங்களது வாழ்வுரிமை பங்களாதேஷிகளால் பறி போவதாக போடோக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே பெரும் கலவரம் மூண்டுள்ளது.
பல வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன. வெடிகுண்டு வீச்சு, பயங்கர ஆயுதங்களால் தாக்கிக் கொள்வது என கலவரம் பெரிதானது. கலவரம் மற்றும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 33 பேர் உயிரிழந்துள்ளனர்.
நிலைமை தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. பிரச்சனையை சீராக கையாளாமல் துப்பாக்கி சூடு நடத்தி உயிரிழப்புக்குக் காரணமான உதால்குரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜார்ஜ் பாசுமட்டாரி மாற்றப்பட்டு அனுப் குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
மோதலில் படுகாயமடைந்த 25க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ராணுவம் கொடி ஊர்வலம் நடத்தி, கலவரக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.
இந்த மோதலில் அஸ்ஸாமின் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும், ஆதிவாசிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 30,000 பேருக்கும் மேல் வீடுகளை விட்டு ஓடிவிட்டனர். 400க்கும் மேற்பட்ட வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளன.
கலவரத்துக்குக் காரணமானவர்களை கண்டதும் சுட ராணுவத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications