For Daily Alerts
Just In
தென்காசி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
தென்காசி: தென்காசியில் 6 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தென்காசியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதில் 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புள்ள மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தென்காசியை சேர்ந்த முருகேசன் என்ற அப்துல்லா கோவையில் தலைமறைவாக இருந்தார்.
அவர் நேற்று தென்காசி வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தென்காசி வந்த முருகேசனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
Comments
Story first published: Monday, October 6, 2008, 16:09 [IST]