இந்தியக் கைதி சரப்ஜித் சிங்குடன் பாக். சட்ட அமைச்சர் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: லாகூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர் சரப்ஜித் சிங்கை, பாகிஸ்தான் சட்ட அமைச்சர் பரூக் நீக் இன்று சந்தித்துப் பேசினார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சரப்ஜித் சிங் லாகூரில்ன், கோட்லாக்பாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கருணை காட்டுமாறு இந்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

1990ம் ஆண்டு லாகூரில் நடந்த குண்டுவெடிப்பில் 14 பேர் பலியான விவகாரத்தில் சரப்ஜித் சிங் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

பலமுறை மரண தண்டனைக்கு தேதி குறிப்பிடப்பட்டு பின்னர் தூக்குக் கயிற்றிலிருந்து தப்பியுள்ளார் சரப்ஜித் சிங்.

இந்த நிலையில் சரப்ஜித் சிங் வழக்கை மறு பரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு பாகிஸ்தான் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இதுதொடர்பாக இன்று சரப்ஜித்சிங்கை, பரூக் சந்தித்துப் பேசினார்.

சரப்ஜித் சிங் விவகாரம் குறித்த இறுதி முடிவை அதிபர் சர்தாரியும், பிரதமர் கிலானியும் எடுத்து அறிவிப்பார்கள் என பரூக் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+