தசரா விழா: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தலைவர்கள் வாழ்த்து

இதுகுறித்து பிரதீபா பாட்டீல்வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தசரா விழாவொயைட்டி அனைத்து குடிமக்களுக்கும் எனது இதயப்பூர்வ வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தீய சக்தியை நல்ல சக்தி வென்றதன் அடையாளம்தான் தசரா. இந்த நல்ல நாளில் மக்களின் வாழ்க்கையிலும், நாட்டிலும் அமைதி, வளம், மகிழ்ச்சி நிறையட்டும் என்று கூறியுள்ளார்.
துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஜெ. வாழ்த்து:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நவராத்திரி விழா ஆன்மிக விழா மட்டுமல்ல, கவின்மிகு கலைஞர்களின் கைவண்ணத்திற்கு பெருமை சேர்க்கும் விழா, உழைப்பிற்கு மதிப்பளிக்கும் விழா. ஆற்றலும், அறிவும், ஆயுளும், வளமும், நலமும் அளிக்கக்கூடிய முப்பெரும் தேவியரின் அருளால், உங்கள் அனைவருக்கும் தனம், தான்யம், ஆரோக்கியம், கல்வி, செல்வம், கலை, ஆகிய அனைத்து நன்மைகளும் விளையட்டும், பயம் நீங்கட்டும். ஏழ்மை அகலட்டும், அறியாமை அகன்று அறிவொளி பிறக்கட்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications