Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கட்சி மாறி ஒட்டு: 2 எம்பிக்கள் பதவி பறிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கட்சி மாறி ஓட்டுப்போட்ட 2 எம்பிக்களின் பதவியை பறிக்கப்பட்டது.

பிரதமர் மன்மோகன் சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் திரும்ப பெற்றதை அடுத்து கடந்த ஜூலை 22ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் அரசு வெற்றி பெற்றது.

நம்பிக்க்கை வாக்கெடுப்பின்போது கட்சி மாறி வாக்களித்த எம்.பிக்கள் வரிசையாக பதவி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பாஜகவைச் ேசர்ந்த சங்கிலியானா மற்றும் ஐக்கிய ஜனதாதளத்தைச் சேர்ந்த ராம் ஸ்வரூப் பிரசாத் ஆகியோர் தற்போது பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூர் வடக்கு தொகுதி எம்பியாக இருந்தவர் சங்கிலியானா. பீகார் மாநிலம் நாலந்தா தொகுதி எம்பி ராமஸ்வரூப் பிரசாத்.

இதுதொடர்பாக நடந்த விசாரணையின் இறுதியில், கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் இந்த இரண்டு எம்பிக்களின் பதவிகளை பறித்து சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி உத்தரவிட்டார்.

பதவி பறிக்கப்பட்ட சங்கிலியானா பெங்களூர் நகரின் முன்னாள் போலீஸ் கமிஷனராவார். ஓய்வு பெற்ற பிறகு பாஜகவில் சேர்ந்தார். முதல் முறையாக எம்பியாக தேர்வான அவரது பதவி தற்போது பறிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+